வத்தளையில் திங்கட்கிழமை (26) நீர்வெட்டு 

வத்தளையில் திங்கட்கிழமை (26) நீர்வெட்டு 

by Staff Writer 22-07-2021 | 4:15 PM
Colombo (News 1st) வத்தளையின் பல பகுதிகளுக்கும் எதிர்வரும் திங்கட்கிழமை 24 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. இதற்கமைய, எதிர்வரும் திங்கட்கிழமை (26) காலை 10 மணி முதல் அடுத்த நாள் காலை 10 மணி வரை நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. வத்தளை - நீர்கொழும்பு வீதியின் ஒரு பகுதி, மாபொலயில் ஒரு பகுதி, வெலிக்கடமுல்ல, ஹெந்தலை வீதியின் நாயகந்த சந்தி வரையான அனைத்து கிளை வீதிகள், அல்விஸ் சுற்றுவட்டம், மருதானை வீதி, புவக்வத்த வீதி, கலகஹதூவ மற்றும் கெரவலப்பிட்டிய ஆகிய பகுதிகளுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. வத்தளை நீர் விநியோக திட்டத்தினூடாக ஹெந்தலை பாலத்தை ஊடறுத்து முன்னெடுக்கப்படும் திருத்தப்பணிகள் காரணமாக நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.