by Staff Writer 22-07-2021 | 7:09 AM
Colombo (News 1st) சீன தயாரிப்பிலான மேலும் 2 மில்லியன் Sinopharm தடுப்பூசிகள் இன்று (22) அதிகாலை நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.
இவற்றை 12 மாவட்டங்களுக்கு வழங்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் கூறினார்.
அதற்கமைய,
? மட்டக்களப்பு மாவட்டத்திற்கு 100,000 தடுப்பூசிகள்
? அம்பாறை மாவட்டத்திற்கு 100,000 தடுப்பூசிகள்
? நுவரெலியா மாவட்டத்திற்கு 100,000 தடுப்பூசிகள்
? புத்தளம் மாவட்டத்திற்கு 100,000 தடுப்பூசிகள்
? பதுளை மாவட்டத்திற்கு 200,000 தடுப்பூசிகள்
? குருநாகல் மாவட்டத்திற்கு 400,000 தடுப்பூசிகள்
? காலி மாவட்டத்திற்கு 275,000 தடுப்பூசிகள்
? மாத்தறை மாவட்டத்திற்கு 200,000 தடுப்பூசிகள்
? இரத்தினபுரி மாவட்டத்திற்கு 200,000 தடுப்பூசிகள்
? பொலன்னறுவை மாவட்டத்திற்கு 100,000 தடுப்பூசிகள்
? மொனராகலை மாவட்டத்திற்கு 100,000 தடுப்பூசிகள்
? ஹம்பாந்தோட்டை மாவட்டத்திற்கு 125,000 தடுப்பூசிகள் என்ற அடிப்படையில் தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளன.
நாட்டிற்கு இதுவரையில் 91 இலட்சம் Sinopharm தடுப்பூசிகள் கிடைத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன குறிப்பிட்டுள்ளார்.