1,511 கொரோனா நோயாளர்கள் பதிவாகிய மாவட்டங்கள்

1,511 கொரோனா நோயாளர்கள் பதிவாகிய மாவட்டங்கள்

by Chandrasekaram Chandravadani 21-07-2021 | 12:23 PM
Colombo (News 1st) நேற்று (20) காலை முதல் இன்று (21) காலை வரையான காலப் பகுதிக்குள் நாட்டில் புதிதாக 1,554 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. இவர்களில் 43 பேர் வௌிநாடுகளில் இருந்து தாயகம் திரும்பியவர்களாவர். அவர்களில் கொழும்பு மாவட்டத்தில் 291 பேரும் கம்பஹா மாவட்டத்தில் 228 பேரும் புத்தளம் மாவட்டத்தில் 09 பேரும் யாழ். மாவட்டத்தில் 15 பேரும் அம்பாறை மாவட்டத்தில் 96 பேரும் பதுளை மாவட்டத்தில் 47 பேரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 34 நபர்களும் கிளிநொச்சி மாவட்டத்தில் 28 பேரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் மூவரும் திருகோணமலை மாவட்டத்தில் 18 பேரும் வவுனியா மாவட்டத்தில் 13 பேரும் மன்னார் மாவட்டத்தில் 15 பேர் அடங்குகின்றனர். இதனிடையே, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று முன்தினம் (19), 43 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.