சுற்றுலாத்துறையினரின் கடன் சலுகைக் காலம் நீடிப்பு 

சுற்றுலாத்துறையினரின் கடன் சலுகைக் காலம் நீடிப்பு 

by Staff Writer 21-07-2021 | 10:45 AM
Colombo (News 1st) கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலாத் துறையை சேர்ந்தவர்களுக்கான கடன் சலுகை காலம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத் துறை சார் தொழிலாளர்கள் சுமார் 300 மில்லியன் ரூபா வரை கடன் பெற்றுள்ளதாகவும் அவர்களில் பெரும்பாலானோர் வணி வங்கிகள் ஊடாக இந்தக் கடன் தொகையை பெற்றுள்ளதாகவும் சுற்றுலாத் துறை அமைச்சின் செயலாளர் எஸ். ஹெட்டியாரச்சி குறிப்பிட்டுள்ளார். இதனால் வணிக வங்கிகள் பாரிய சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளதாக அவர் தெரிவித்தார். ஆகவே, உலக வங்கி அல்லது ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் சலுகைக் கடனை பெற்று, இந்த வணிக வங்கிகளின் கடனை செலுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக சுற்றுலாத் துறை அமைச்சின் செயலாளர் எஸ். ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.