இன்று 1,180 பேருக்கு கொரோனா தொற்று

இன்று 1,180 பேருக்கு கொரோனா தொற்று

by Staff Writer 21-07-2021 | 7:24 PM
Colombo (News 1st) இன்று (21) இதுவரை 1,180 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய, இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 2,89,153 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து 930 பேர் இன்று பூரண குணமடைந்துள்ளனர். இலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 2,63,758 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான 3,870 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.