41 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டது

by Staff Writer 20-07-2021 | 11:55 AM
Colombo (News 1st) யாழ். தொண்டமானாறு கடற்பகுதியில் 41 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. நேற்று (19) அதிகாலை முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது இந்த கேரள கஞ்சா தொகை கைப்பற்றப்பட்டதாக கடற்படையினர் குறிப்பிட்டனர். இதன்போது 139 கிலோ 100 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. இவ்வாறு கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா கடற்படையினரால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.