Colombo (News 1st) இன்று (20) காலை வரையான 24 மணித்தியாலத்தில் நாட்டில் புதிதாக 1,487 கொரோனா நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்தது.
இவர்களில் 23 பேர் வௌிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்களாவர்.
கொழும்பு மாவட்டத்தில் 164 பேரும் கம்பஹா மாவட்டத்தில் 102 பேரும் கண்டி மாவட்டத்தில் 28 பேரும் யாழ். மாவட்டத்தில் 75 நபர்களும் புத்தளம் மாவட்டத்தில் 38 பேரும் அம்பாறை மாவட்டத்தில் 58 பேரும் நுவரெலியா மாவட்டத்தில் 14 நபர்களும் பதுளை மாவட்டத்தில் 126 பேரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 19 பேரும் கிளிநொச்சி மாவட்டத்தில் 19 பேரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒருவரும் திருகோணமலை மாவட்டத்தில் 11 பேரும் வவுனியா மாவட்டத்தில் 27 பேரும் மன்னார் மாவட்டத்தில் ஒருவரும் தொற்றாளர்களாக பதிவாகியுள்ளனர்.

இதனிடையே, நாட்டில் நேற்று முன்தினம் (18), 48 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்திருந்தார்.
