​NEET:அகதி மாணவர்களுக்கும் அனுமதி வழங்கல் வேண்டும்

​NEET தேர்வில் பங்கேற்க இலங்கை அகதி மாணவர்களுக்கும் அனுமதி வழங்கப்பட வேண்டும்: பழ.நெடுமாறன் கோரிக்கை

by Bella Dalima 20-07-2021 | 3:52 PM
Colombo (News 1st) இந்தியாவில் மருத்துவ படிப்பிற்கு தேவையான ​NEET தேர்வில் பங்கேற்க இலங்கை அகதி மாணவர்களுக்கும் அனுமதி வழங்கப்பட வேண்டும் என பழ.நெடுமாறன் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் கோரிக்கை முன்வைத்துள்ள பழ.நெடுமாறன் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளார். தமிழ்நாட்டில் வசிக்கும் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான இலங்கை அகதிகளின் பிள்ளைகள் தமிழகத்திலேயே பிறந்து, அங்குள்ள அரச பாடசாலைகளில் கல்வி பயின்று வருவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், மருத்துவ படிப்பை மேற்கொள்வதற்கான விரும்பம் மாணவர்களிடம் காணப்படுகின்ற போதிலும், அதற்கான அனுமதி வழங்கப்படவில்லை என பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் தமிழக முதலர்வர் மு.க. ஸ்டாலின் உடனடியாக தலையீடு செய்து, அரச மருத்துவ கல்லூரிகளில் இலங்கை அகதிகளின் பிள்ளைகளும் கல்வியை தொடர்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பழ.நெடுமாறன் கோரிக்கை விடுத்துள்ளார்.