ஜா-எலயில் ஒரு தொகை ஹெரோயினுடன் இருவர் கைது

by Staff Writer 20-07-2021 | 9:13 AM
Colombo (News 1st) ஜாஎல – கொட்டுகொட பகுதியில் 1 கிலோ 225 கிராம் ஹெரோயினுடன் 02 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் (CCD) நேற்று (19) மாலை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரில் ஒருவர் பெண் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். 26 மற்றும் 29 வயதான இருவரே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே, போதைப்பொருள் வியாபாரத்தின் ஊடாக பெற்றுக் கொள்ளப்பட்டதாக கருதப்படும் 868,900 ரூபா பணமும் சந்தேகநபர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.