ஒன்பதாவது நாளாகவும் ஆசிரியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

ஒன்பதாவது நாளாக தொடரும் ஆசிரியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு

by Staff Writer 20-07-2021 | 7:32 AM
Colombo (News 1st) Online கற்பித்தல் நடவடிக்கைகளிலிருந்து விலகி, ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கை இன்று (20) ஒன்பதாவது நாளாகவும் தொடர்கின்றது. சம்பள கோரிக்கைக்கு அரசாங்கத்தினால் இதுவரை உரிய தீர்வு கிட்டாமையே அதற்கான காரணமாகும். இதனிடையே, தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பில் இன்று (20) விசேட கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.