ஈராக்கில் குண்டுத் தாக்குதல்: 25 பேர் உயிரிழப்பு

ஈராக்கில் குண்டுத் தாக்குதல்: 25 பேர் உயிரிழப்பு

by Staff Writer 20-07-2021 | 8:16 AM
Colombo (News 1st) ஈராக் தலைநகர் பக்தாத்திலுள்ள சந்தைத் தொகுதியொன்றில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் குறைந்தது 25 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பலர் காயமடைந்துள்ளனர். கடந்த 06 மாதங்களில் இடம்பெற்ற மிக ​மோசமான தாக்குதல் சம்பவம் இதுவென கூறப்படுகின்றது. இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பு உரிமை கோரியுள்ளதுடன், தமது அமைப்பைச் சேர்ந்தவர்களே தற்கொலை தாக்குதலை நடத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.