by Staff Writer 20-07-2021 | 8:16 AM
Colombo (News 1st) ஈராக் தலைநகர் பக்தாத்திலுள்ள சந்தைத் தொகுதியொன்றில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் குறைந்தது 25 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
கடந்த 06 மாதங்களில் இடம்பெற்ற மிக மோசமான தாக்குதல் சம்பவம் இதுவென கூறப்படுகின்றது.
இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பு உரிமை கோரியுள்ளதுடன், தமது அமைப்பைச் சேர்ந்தவர்களே தற்கொலை தாக்குதலை நடத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.