by Staff Writer 19-07-2021 | 3:14 PM
Colombo (News 1st) அமெரிக்க தயாரிப்பிலான மேலும் 70,200 Pfizer தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
நாட்டுக்கு கிடைத்துள்ள மூன்றாவது Pfizer தடுப்பூசி தொகுதி இதுவாகும்.
இன்று (19) அதிகாலை கட்டாருக்கு சொந்தமான விமானமொன்றின் மூலம் தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டன.
அதற்கமைய இதுவரையில் 123,000 Pfizer தடுப்பூசிகள் நாட்டுக்கு கிடைத்துள்ளன.
இந்த தடுப்பூசிகள் அனைத்தையும் மன்னார் மாவட்ட மக்களுக்கு பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன் தெரிவித்தார்.
தடுப்பூசிகள் நாரஹேன்பிட்டவில் அமைந்துள்ள இரத்த வங்கிக்கு எடுத்துச் செல்லப்பட்டன.