தமது கொள்கைகளை நடைமுறைப்படுத்த 03 வருடங்கள் அன்றி அதன் பின்னரும் 05 வருடங்கள் உள்ளதாக ஜனாதிபதி தெரிவிப்பு

by Staff Writer 19-07-2021 | 8:57 PM
Colombo (News 1st) தமது கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கு இன்னும் 03 வருடங்கள் அன்றி, அதன் பின்னரும் 05 வருடங்கள் உள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். ஊடக நிறுவனங்களின் தலைவர்களுடன் இன்று (19) நடைபெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டதாக, ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.