காற்றின் வேகம் அதிகரிக்கும் சாத்தியம்

கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகம் அதிகரிக்கும் சாத்தியம் - வளிமண்டலவியல் திணைக்களம்

by Staff Writer 19-07-2021 | 6:38 PM
Colombo (News 1st) கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகம் அதிகரிக்குமென்பதால் அவதானத்துடன் செயற்படுமாறு மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. காலி தொடக்கம் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பிராந்தியங்களில் காற்று மணித்தியாலத்திற்கு 60 தொடக்கம் 70 கிலோமீட்டர் வரை அதிகரித்து வீசுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஏனைய கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகமானது, இடைக்கிடையே மணித்தியாலத்திற்கு 50 தொடக்கம் 60 கிலோமீட்டர் வரை அதிகரிக்கும் என திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது. குறித்த கடற்பிராந்தியங்களின் கடல் அலை மேலெழக்கூடும் என்பதால் அவதானத்துடன் செயற்படுமாறு மீனவர்களுக்கும் கடற்சார் ஊழியர்களுக்கும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.