‘ரன் மல்லி’ தொடர்பான விசாரணைகள் குற்றப்புலனாய்வு பிரிவிடம் கையளிப்பு

‘ரன் மல்லி’ தொடர்பான விசாரணைகள் குற்றப்புலனாய்வு பிரிவிடம் கையளிப்பு

‘ரன் மல்லி’ தொடர்பான விசாரணைகள் குற்றப்புலனாய்வு பிரிவிடம் கையளிப்பு

எழுத்தாளர் Staff Writer

19 Jul, 2021 | 2:48 pm

Colombo (News 1st) துபாயில் வசிக்கும் போதைப்பொருள் கடத்தற்காரரான ‘ரன் மல்லி’ என் அழைக்கப்படுபவர் தொடர்பிலான விசாரணைகள் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் (CID) கையளிக்கப்பட்டுள்ளன.

அவருடைய சொத்துக்கள் தொடர்பில் விரிவான விசாரணை முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

இதுவரையில் அவருடைய சொத்துக்களை தம்வசம் வைத்திருக்கும் உறவினர்கள் மற்றும் நெருங்கியவர்கள் தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதனிடையே, ‘ரன் மல்லி’ என அழைக்கப்படும் சந்தேகநபரின் உறவினர் ஒருவரது வீட்டில் நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் 13.9 மில்லியன் ரூபா பணம் பொலிஸாரினால் நேற்று (18) கைப்பற்றப்பட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்