டெவோன் நீர்வீழ்ச்சியில் தவறி வீழ்ந்த யுவதி மாயம்

டெவோன் நீர்வீழ்ச்சியில் தவறி வீழ்ந்த யுவதி காணாமல் போயுள்ளார்

by Staff Writer 18-07-2021 | 7:03 PM
Colombo (News 1st) ஹட்டன் - பத்தனை டெவோன் நீர்வீழ்ச்சியை பார்வையிடச் சென்ற யுவதி ஒருவர் காணாமல் போயுள்ளார். 19 வயதான குறித்த யுவதி நீர்வீழ்ச்சியின் உச்சிப் பகுதியில் இருந்து தவறி வீழ்ந்திருக்கலாம் என பத்தனை பொலிஸார் தெரிவித்தனர். நண்பர்கள் மூவருடன் நீர்வீழ்ச்சியைப் பார்வையிடச் சென்றிருந்த சந்தர்ப்பத்தில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக நியூஸ்பெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார். லிந்துலை, சென் தோமஸ் தோட்டத்தைச் சேர்ந்த யுவதி ஒருவரே இவ்வாறு நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார். டெவோன் நீர்வீழ்ச்சிப் பகுதியில் வழுக்கல் நிலை காணப்படுவதால் அப்பகுதியில் நுழைய தடை விதித்து அமைக்கப்பட்டுள்ள ​வேலியைத் தாண்டியே யுவதிகள் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காணாமல் போன யுவதியை தேடும் நடவடிக்கையில் பத்தனை பொலிஸாரும் இராணுவத்தினரும் ஈடுபட்டுள்ளனர்.