by Staff Writer 18-07-2021 | 2:43 PM
Colombo (News 1st) நீர்கொழும்பு - சீதுவை பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் (STF) மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
கிடைத்த தகவலுக்கமைய, குறித்த சந்தேகநபர் உள்ளிட்ட மூவர் பயணித்த கார் நேற்றிரவு (17) பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் பின்தொடரப்பட்டு, காரை சோதனையிட்டபோதே இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
இதில் காயமடைந்த ஒருவர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த சந்தேகநபர் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புபட்டவர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன மேலும் குறிப்பிட்டார்.