கொள்ளுப்பிட்டியில் நாளை முதல் விசேட போக்குவரத்து

கொள்ளுப்பிட்டி பகுதியில் நாளை (19) முதல் விசேட போக்குவரத்து திட்டம்

by Staff Writer 18-07-2021 | 4:24 PM
Colombo (News 1st) கொள்ளுப்பிட்டி - உத்தரானந்த மாவத்தை மற்றும் Rotunda பூங்கா வீதியில் நாளை (19) காலை 06 மணி முதல் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வீதி அபிவிருத்தித் திட்டம் காரணமாக ஏற்படக்கூடிய வாகன நெரிசலைக் குறைப்பதற்காக குறித்த வீதியில் ஒருவழி போக்குவரத்து முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்கிணங்க, Rotunda சந்தியில் ஆரம்பமாகும் உத்தரானந்த மாவத்தை பகுதியில் அப்துல் மாக்கன் மாக்கர் மாவத்தை நோக்கிச் செல்லும் வாகனங்கள் மாத்திரமே பயணிக்க முடியும் என பொலிஸார் அறிவித்துள்ளனர். எக்காரணம் கொண்டும் அப்துல் மாக்கன் மாக்கார் மாவத்தையில் இருந்து உத்தரானந்த மாவத்தை பகுதிக்கு வாகனங்கள் செல்வதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது. அத்துடன், சென். ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தையில் இருந்து பெரஹர மாவத்தைக்கு பிரவேசிக்கும் வாகனங்கள் Rotunda சுற்றுவட்டம் நோக்கிப் பயணிக்க முடியாது. எனவே, மாற்றுவீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் சாரதிகளை அறிவுறுத்தியுள்ளனர்.