மேலும் 31 கொரோனா மரணங்கள் பதிவு

மேலும் 31 கொரோனா மரணங்கள் பதிவு; இதுவரை 3,733 பேர் உயிரிழப்பு

by Staff Writer 17-07-2021 | 8:13 PM
Colombo (News 1st) நாட்டில் மேலும் 31 கொரோனா மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதி செய்யப்பட்டுள்ளன. உயிரிழந்தவர்களில் 17 பெண்களும் 14 ஆண்களும் அடங்குகின்றனர். அவர்களில் 23 பேர் 60 வயதிற்கும் மேற்பட்டவர்களாவர். அதற்கமைய, நாட்டில் இதுவரை 3,733 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர். இதேவேளை, இன்று இதுவரை 980 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய, நாட்டில் இதுவரை 2,83,040 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது​.

ஏனைய செய்திகள்