தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து ஜோசப் ஸ்டாலின், துமிந்த நாகமுவ விடுவிப்பு

by Staff Writer 16-07-2021 | 6:40 PM
Colombo (News 1st) முல்லைத்தீவு விமானப்படை முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட 16 பேர் தனிமைப்படுத்தலிலிருந்து இன்று விடுவிக்கப்பட்டனர். இதேவேளை, நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்ட பின்னர் தனிமைப்படுத்தலுக்காக அனுப்பப்பட்ட முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரசார செயலாளர் துமிந்த நாகமுவ தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து வௌியேறியுள்ளார்.