சேதன பசளை தயாரிப்பிற்கு 1,15,000 விவசாயிகள் பதிவு

சேதன பசளை தயாரிப்பிற்கு 1,15,000 விவசாயிகள் பதிவு

by Staff Writer 16-07-2021 | 4:12 PM
Colombo (News 1st) நாடளாவிய ரீதியில் 1,15,000 விவசாயிகள், சேதன பசளை தயாரிப்பிற்காக தங்களை பதிவு செய்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. சுமார் 05 இலட்சம் விவசாயிகள் சேதன பசளை தயாரிப்பில் தங்களை பதிவு செய்துகொள்வார்களென தாம் எதிர்பார்ப்பதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். இதனிடையே, அமைச்சரவையின் தீர்மானத்திற்கமைய, சேதன பசளை தயாரிப்பில் ஈடுபடும் விவசாயிகளுக்கான 12,500 ரூபா கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இரண்டு கட்டங்களின் கீழ், இந்த கொடுப்பனவை வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். முதலாம் கட்டமாக 7,500 ரூபாவும் இரண்டாம் கட்டமாக 5,000 ரூபாவும் வழங்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் குறிப்பிட்டார்.