by Staff Writer 16-07-2021 | 4:01 PM
Colombo (News 1st) உபாதை காரணமாக இலங்கை அணியின் குசல் ஜனித் பெரேராவிற்கு இந்தியாவுடனான சர்வதேச ஒருநாள் மற்றும் T20 கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தோற்பட்டையில் ஏற்பட்ட உபாதை காரணமாக அவரால் போட்டிகளில் பங்கேற்க முடியாதுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, பயிற்சி போட்டிகளின் போது ஏற்பட்ட உபாதை காரணமாக வேகப்பந்து வீச்சாளர் பினுர பெர்னாண்டோவிற்கும் இந்தியாவுடனான சர்வதேச ஒருநாள் போட்டியில் பங்குபெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.