1,453 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகிய பிரதேசங்கள்

1,453 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகிய பிரதேசங்கள்

by Chandrasekaram Chandravadani 15-07-2021 | 12:10 PM
Colombo (News 1st) இன்று (15) காலை வரையான 24 மணி நேரத்தில் நாட்டில் புதிதாக 1,540 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அவர்களில் 87 பேர் வௌிநாடுகளில் இருந்து தாயகம் திரும்பிய உள்நாட்டவர்களாவர். ஏனைய 1,453 பேரில் கம்பஹா மாவட்டத்திலேயே அதிக தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். கம்பஹா மாவட்டத்தில் 235 பேரும் கொழும்பு மாவட்டத்தில் 232 பேரும் கண்டி மாவட்டத்தில் 49 பேரும் யாழ். மாவட்டத்தில் 81 நபர்களும் புத்தளம் மாவட்டத்தில் 18 நபர்களும் அம்பாறை மாவட்டத்தில் 66 பேரும் நுவரெலியா மாவட்டத்தில் 11 பேரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 67 பேரும் கிளிநொச்சி மாவட்டத்தில் 14 நபர்களும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 07 பேரும் திருகோணமலை மாவட்டத்தில் 20 பேரும் வவுனியா மாவட்டத்தில் 24 பேரும் மன்னார் மாவட்டத்தில் 08 பேரும் தொற்றாளர்களாக பதிவாகியுள்ளனர். ஏனையோர் களுத்துறை, குருநாகல், காலி, கேகாலை, அனுராதபுரம், மாத்தறை, பொலன்னறுவை, இரத்தினபுரி, ஹம்பாந்தோட்டை, பதுளை, மொனராகலை மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனிடையே, நேற்று முன்தினம் (13) 37 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் கூறியிருந்தார். அதன்பிரகாரம், நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,611 ஆக பதிவாகியுள்ளது.