by Staff Writer 15-07-2021 | 10:37 PM
Colombo (News 1st) 50 கொரோனா மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் நேற்று (14) உறுதிப்படுத்தப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
உயிரிழந்தவர்களில் 29 ஆண்களும் 21 பெண்களும் அடங்குகின்றனர்.
30-க்கும் 59 வயதிற்கும் இடைப்பட்ட 12 பேரும், 60 வயதிற்கு மேற்பட்ட 38 பேரும் COVID-19 தொற்றினால் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, நாட்டில் பதிவாகிய கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 3,661 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, இன்று இதுவரை 967 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தொற்றுக்குள்ளான 2 ,53,953 பேர் குணமடைந்துள்ள நிலையில், 22,462 பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.