English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
15 Jul, 2021 | 12:25 pm
Colombo (News 1st) கொரோனா தொற்று பரவலை அடுத்து, ஸ்பெயினில் கடந்த வருடம் அமுல்படுத்தப்பட்ட முடக்கல் நிலையானது அரசியலமைப்பிற்கு முரணானது என அந்நாட்டு உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்த தீர்ப்பின் மூலம் விதிமுறைகளை மீறியமைக்காக அபராதம் விதிக்கப்பட்டவர்களுக்கு அவர்கள் செலுத்திய பணத்தை மீட்டெடுப்பதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் 14 ஆம் திபதி நாட்டில் அவசர நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டதுடன், மக்கள் வீடுகளிலிருந்து வௌியேறுவதற்கு தடை விதிக்கப்பட்டது.
அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் வௌியேற முடியும் என அறிவிக்கப்பட்ட போதிலும், அதற்கேற்றவாறு வர்த்தக நிலையங்கள் திறந்திருக்கப்படவில்லை என கூறப்படுகின்றது.
அத்துடன் ஸ்பெயினில் அவசர நிலை, விதிவிலக்கு நிலை மற்றும் முற்றுகை நிலை ஆகியன பிரகடனப்படுத்தப்பட்டன.
இவ்வாறான விதிமுறைகள், உரிமைகளை மீறும் அடக்குமுறைகளாகவே காணப்படுவதாக நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
26 Dec, 2021 | 05:29 PM
25 Jul, 2021 | 03:51 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS