நாவலப்பிட்டியில் 13 வயது சிறுமி துஷ்பிரயோகம்: தந்தை உட்பட ஐவர் கைது

நாவலப்பிட்டியில் 13 வயது சிறுமி துஷ்பிரயோகம்: தந்தை உட்பட ஐவர் கைது

எழுத்தாளர் Staff Writer

15 Jul, 2021 | 11:48 am

Colombo (News 1st) நாவலப்பிட்டியில் 13 வயது சிறுமி ஒருவரை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய சம்பவம் தொடர்பில் இதுவரை ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் சிறுமியின் தந்தையும் அடங்குவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

சந்தேகநபர்கள் ஐவரும் நாவலப்பிட்டி நீதவான் நீதிமன்றத்தில் நேற்று (14) ஆஜர்ப்படுத்தப்பட்டதை அடுத்து, நீதவான் உத்தரவின்பேரில் அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் 6 பேர் தொடர்புபட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

நாவலப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்