வாகன விபத்துகளில் சிக்கி 10 பேர் உயிரிழப்பு

வாகன விபத்துகளில் சிக்கி 10 பேர் உயிரிழப்பு

by Staff Writer 14-07-2021 | 1:25 PM
Colombo (News 1st) கடந்த 24 மணித்தியாலங்களில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 07 பேர் மோட்டார்சைக்கிள் ஓட்டுனர்கள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டார். விபத்துகளில் உயிரிழந்த ஏனைய மூவரும் பாதசாரிகள் என அவர் கூறினார். வாகன விபத்துகளினால் 2020 ஆம் ஆண்டு 2,144 பேரும் 2019 ஆம் ஆண்டு 2,139 பேரும் உயிரிழந்துள்ளதாக கூறிய பொலிஸ் ஊடகப் பேச்சாளர், இந்த வருடம் இதுவரையான காலப் பகுதியில் மாத்திரம் 1,266 பேர் மரணமடைந்துள்ளதாக தெரிவித்தார். கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில் வாகன விபத்துகளினால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன இதன்போது குறிப்பிட்டார்.