அதிகூடிய தடுப்பூசிகள் நேற்று (13) ஏற்றப்பட்டன

நாளொன்றில் அதிகூடிய தடுப்பூசிகள் நேற்று (13) ஏற்றப்பட்டன

by Staff Writer 14-07-2021 | 2:03 PM
Colombo (News 1st) நாட்டில் ஒரு நாளில் அதிகூடிய தடுப்பூசி ஏற்றும் செயற்பாடு நேற்று (13) முன்னெடுக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினத்தில் மாத்திரம் 337,445 பேருக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார். அதற்கமைய 289,122 பேருக்கு நேற்று முதலாவது Sinopharm தடுப்பூசியும் 32,385 பேருக்கு இரண்டாவது Sinopharm தடுப்பூசியும் 15,202 பேருக்கு Sputnik V தடுப்பூசியும் 700 பேருக்கு Pfizer தடுப்பூசியும் 36 பேருக்கு AstraZeneca தடுப்பூசியும் ஏற்றப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.