கொஸ்வத்த மஹாநாம தேரருக்காக ஆட்கொணர்வு மனு தாக்கல்

கொஸ்வத்த மஹாநாம தேரரை நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு ஆட்கொணர்வு மனு தாக்கல்

by Staff Writer 14-07-2021 | 8:13 PM
Colombo (News 1st) நீதிமன்றம் பிணையில் விடுவித்த பின்னர் பொலிஸார் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்திய கொஸ்வத்த மஹாநாம தேரரை உடனடியாக நீதிமன்றில் ஆஜர்படுத்தும்படியும் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்க உத்தரவிடக் கோரியும் மாளிகாவத்தை - சமாதி நிறுவனத்தின் தங்கல்லே சாரத தேரர் மேன்முறையீட்டு நீதிமன்றில் ஆட்கொணர்வு மனுவொன்றை இன்று தாக்கல் செய்தார். இந்த மனுவில் இராஜகிரிய, மிரிஹான மற்றும் தலங்கம பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளும் பத்தரமுல்ல சுகாதார வைத்திய அதிகாரியும் பொலிஸ்மா அதிபர் உள்ளிட்டோரும் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.