by Staff Writer 13-07-2021 | 5:41 PM
Colombo (News 1st) நாட்டில் COVID-19 தொற்றுக்குள்ளானவர்களில் 1,328 பேர் இன்று குணமடைந்துள்ளனர்.
அதற்கமைய, நாட்டில் இதுவரை 2,47,569 கொரோனா தொற்றாளர்கள் குணமடைந்துள்ளனர்.
25,004 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாட்டில் இதுவரையில் 2,76,106 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
3,533 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளனர்.