சாட்சி ஔிப்பதிவிற்கான பிரிவை ஸ்தாபிக்க அனுமதி 

சிறுவர் துஷ்பிரயோகம்; சாட்சியங்களை ஔிப்பதிவு செய்வதற்கான பிரிவை ஸ்தாபிக்க அனுமதி 

by Staff Writer 13-07-2021 | 1:19 PM
Colombo (News 1st) துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்படும் சிறார்களின் சாட்சியங்களை ஔிப்பதிவு செய்வதற்கான பிரிவுகளை ஸ்தாபிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. ஒன்பது மாகாணங்களிலும் இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்படும் சிறார்கள், பகிரங்க நீதிமன்றங்களில் சாட்சி வழங்கும் போது பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்குவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக அவ்வாறான சிறார்களின் சாட்சியங்களை ஔிப்பதிவு செய்து நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கான நடவடிக்கை கொழும்பில் மாத்திரம் முன்னெடுக்கப்படுகின்றது. இந்த நடவடிக்கையை 09 மாகாணங்களிலும் முன்னெடுப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் கல்வி அமைச்சினால் சமர்ப்பிக்கப்பட்டதுடன், அதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.