by Staff Writer 12-07-2021 | 10:23 PM
Colombo (News 1st) இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் இல்லத்திற்கு முன்பாக இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அடுத்த மாதம் 26 ஆம் திகதி வரை இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் ஏ.சி.றிஷ்வான் முன்னிலையில் இன்று (12) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது, மட்டக்களப்பு பொலிஸாரினால் முன்னெடுக்கப்படும் விசாரணைகளில் திருப்தியில்லை எனவும் மட்டக்களப்பு பிரதி பொலிஸ்மா அதிபர் தலைமையில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் மனுதாரர்களால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
மனுதாரர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதவான், வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 26 ஆம் திகதி வரை ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.
கடந்த மாதம் 21 ஆம் திகதி இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் இல்லத்திற்கு முன்பாக பாதுகாப்புக் கடமையிலிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 35 வயதான மகாலிங்கம் பாலசுந்தரம் என்ற லொறி சாரதி உயிரிழந்தார்.