நுகர்வோர் விவகார அதிகார சபை விடுத்துள்ள கோரிக்கை

உரத்தை மறைத்து வைத்திருப்போர் தொடர்பில் அறிவிக்குமாறு நுகர்வோர் விவகார அதிகார சபை கோரிக்கை

by Staff Writer 12-07-2021 | 3:48 PM
Colombo (News 1st) உரத்தை மறைத்துவைத்திருக்கும் நபர்கள் தொடர்பில் உடனடியாக அறிவிக்குமாறு நுகர்வோர் விவகார அதிகார சபை, பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் 1977 என்ற துரித இலக்கத்திற்கு அழைத்து அறிவிக்க முடியும் என அதிகார சபையின் தலைவர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சாந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார். நாட்டின் பல பகுதிகளில் வர்த்தகர்கள் உரத்தை மறைத்துவைத்துள்ளதாக அதிகார சபைக்கு தகவல் கிடைத்துள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.