ஆசிரியர்களுக்கு இன்று (12) முதல் கொரோனா தடுப்பூசி

ஆசிரியர்களுக்கு இன்று (12) முதல் கொரோனா தடுப்பூசி

by Staff Writer 12-07-2021 | 3:19 PM
Colombo (News 1st) ஆசிரியர்களுக்கு இன்று (12) முதல் கொரோனா தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகள் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள பாடசாலைகளின் ஆசிரியர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக அவர் கூறினார். இதற்கு மேலதிகமாக அனுராதபுரம், பதுளை, இரத்தினபுரி உள்ளிட்ட தடுப்பூசி ஏற்றப்படும் மாவட்டங்களிலுள்ள ஆசிரியர்களுக்கும் தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளதாக அவர் கூறினார்.