ஹசலக பிரதேசத்தில் பொறியில் சிக்கி சிறுத்தை உயிரிழப்பு

by Staff Writer 11-07-2021 | 9:12 PM
Colombo (News 1st) ஹசலக மஹகல இன்ன பகுதியில் பொறியில் சிக்கிய சிறுத்தையொன்று இன்று (11) முற்பகல் உயிரிழந்தது. நேற்றிரவு (10) பொறியில் சிக்கிய சிறுத்தையை பிரதேசவாசிகள் இன்று அதிகாலை கண்டுள்ளனர். அதன் பின்னர் அவர்கள் இது குறித்து ஹசலக வனவிலங்குகள் அலுவலகத்துக்கு தகவல் கொடுத்துள்ளனர். வனவில அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வருகைதந்த போதிலும் கால்நடை வைத்தியர் ஒருவர் அவ்விடத்து வருகைதராதமையால் சிறுத்தையை பொறியிலிருந்து விடுவிக்க மேலும் ஒரு மணித்தியாலத்துக்கு மேல் தாமதமானதாக பிரதேசவாசிகள் குறிப்பிட்டனர். பின்னர் ரந்தெனிகல கால்நடை வைத்திய அதிகாரி அலுவலகத்தின் வைத்தியர் ஒருவர் இன்று காலை 8 மணியளவில் சம்பவ இடத்துக்கு வருகைதந்த போதிலும் சிறுத்தையின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. இது தொடர்பாக ஹசலக மற்றும் ரந்தெனிகல வனவிலங்குகள் அலுவலகங்களிடம் நாம் வினவிய போதிலும் அவர்கள் அதற்கு பதிலளிக்கவில்லை.