60,000 பாவனையாளர்களுக்கு மின் விநியோகம் தடை 

சீரற்ற வானிலை: 60,000 இற்கும் அதிக பாவனையாளர்களுக்கு மின் விநியோகம் தடை 

by Staff Writer 11-07-2021 | 3:07 PM
Colombo (News 1st) பலத்த காற்று காரணமாக 60,000 இற்கும் மேற்பட்ட மின் பாவனையாளர்களுக்கான மின் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. மின் விநியோகத்தை மீண்டும் வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சின் ஊடகப்பேச்சாளர் சுலக்‌ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார். கம்பஹா, களுத்துறை, மாத்தளை, கேகாலை, பதுளை, காலி ஆகிய மாவட்டங்களில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். நாட்டின் பல பகுதிகளை ஊடறுத்து வீசிய பலத்த காற்றினால், நேற்று 485,000 இற்கும் மேற்பட்டோருக்கான மின் விநியோகம் தடைப்பட்டது.