2021 லங்கா ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் பிற்போடப்பட்டது

2021 லங்கா ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் பிற்போடப்பட்டது

2021 லங்கா ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் பிற்போடப்பட்டது

எழுத்தாளர் Staff Writer

10 Jul, 2021 | 3:09 pm

Colombo (News 1st) 2021 லங்கா ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் பிற்போடப்பட்டுள்ளது.

இம்மாதம் 29 ஆம் திகதி தொடர் ஆரம்பிக்கப்படவிருந்த நிலையில், எதிர்வரும் நவம்பர் மாதம் 19 ஆம் திகதிக்கு போட்டி பிற்போடப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், நவம்பர் மாதம் 19 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 12 ஆம் திகதி வரை 2021 லங்கா ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் உள்ளிட்ட போட்டிகள் அடுத்த மாதம் இடம்பெறவுள்ளதை முன்னிட்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே இலங்கை – இந்திய அணிகளுக்கிடையிலான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரையும் ஒத்திவைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இலங்கை அணியின் பயிற்றுனருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அணியின் தரவு ஆய்வாளர் ஜி.டி.நிரோஷனுக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, எதிர்வரும் 13 ஆம் திகதி ஆரம்பமாகவிருந்த போட்டித் தொடரை இம்மாதம் 17 ஆம் திகதி ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்