மேலும் 33 கொரோனா மரணங்கள் பதிவு

மேலும் 33 கொரோனா மரணங்கள் பதிவு

by Staff Writer 10-07-2021 | 10:12 PM
Colombo (News 1st) மேலும் 33 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இந்த 33 கொரோனா மரணங்களும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் நேற்று (09) உறுதி செய்யப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. 19 ஆண்களும் 14 பெண்களுமே கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர். அதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,497 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, இன்று இதுவரை 919 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதங்கமைய, நாட்டில் 2,72,402 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,804 கொரோனா நோயாளர்கள் இன்று குணமடைந்ததுடன், இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 2,42,839 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.