சீரற்ற வானிலையால் ஒருவர் உயிரிழப்பு;  5,777 பேர் பாதிப்பு 

by Staff Writer 10-07-2021 | 8:49 PM
Colombo (News 1st) கம்பளை - தொலஸ்பாகை பகுதியில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் 76 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார். சீரற்ற வானிலையினால் 6 மாவட்டங்களை சேர்ந்த 5,777 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவப்பெயர்ச்சி காரணமாக நேற்று (09) இரவு முதல் இன்று அதிகாலை வரை நாட்டின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்துள்ளது.