இரசாயன உர இறக்குமதி தடை: தீர்மானத்தில் மாற்றமில்லை

இரசாயன உர இறக்குமதி தடை: தீர்மானத்தில் மாற்றமில்லை

by Staff Writer 10-07-2021 | 8:13 PM
Colombo (News 1st) இரசாயன உரம் மற்றும் கிருமிநாசினி இறக்குமதி தடையை அகற்றுவதற்கு தொடர்பில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கை வௌியிட்டுள்ளது. இரசாயன உரம் மற்றும் கிருமிநாசினி இறக்குமதியை தடை செய்வதற்கு ஜனாதிபதி எடுத்த முடிவை, புதிய நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ மாற்றியுள்ளதாக இணையதளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பரவும் செய்தி உண்மைக்கு புறம்பானது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இரசாயன உர பயன்பாட்டிலிருந்து நீங்கி, சேதனப் பசளையை பயன்படுத்துவதாக எடுத்த முடிவை நிராகரிக்கும் நோக்கம் அரசாங்கத்திடம் இல்லை என அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.