by Staff Writer 09-07-2021 | 3:08 PM
Colombo (News 1st) பதுளை - பசறை, மடுல்சீமை, விராளிபத்தனை தோட்டத்தில் 14 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியமை தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறுமியின் உறவுக்கார இளைஞர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
25 வயதான இளைஞரை பதுளை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சிறுமி 5 மாத கர்பிணி என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பசறை மெட்டிகாதென்ன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுமியை சட்ட மருத்துவ பரிசோதனைக்காக பதுளை பொது வைத்தியசாலைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
சம்பவம் தொடர்பில் மடுல்சீமை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.