Colombo (News 1st) மாத்தளை மாவட்டத்தில் இரண்டு கிராமங்கள் இன்று (08) காலை 06 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.
இதனடிப்படையில், மாத்தளை மாவட்டத்தின் மாத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட போகஹகொட்டுவ கிராம உத்தியோகத்தர் பிரிவின் அகலவத்தை கிராமம் மற்றும் ஹரஸ்கம கிராமம் ஆகியன தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.