அடிப்படைவாத வகுப்பில் கலந்துகொண்ட இளைஞர் கைது

சஹ்ரான் ஹாசிமின் அடிப்படைவாத வகுப்புகளில் கலந்துகொண்ட மற்றுமொருவர் கைது

by Staff Writer 08-07-2021 | 1:43 PM
Colombo (News 1st) சஹ்ரான் ஹாசிம் மற்றும் அவரை பின்தொடந்தவர்களால் நடத்தப்பட்ட அடிப்படைவாத வகுப்புகளில் கலந்துகொண்ட மற்றுமொருவர் நாரம்மல பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட அடிப்படைவாத வகுப்புகளில் சந்தேகநபர் கலந்துகொண்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டார். நாரம்மல பகுதியை சேர்ந்த 24 வயதான மொஹமட் ஷியாம் என்ற இளைஞரே கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார். சந்தேகநபர் தற்போது கொச்சிக்கடை - தலுகொட்டுவ பகுதியை வசிப்பிடமாக கொண்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணையினூடாக முன்னெடுக்கப்படும் சுற்றிவளைப்புகளில், அடிப்படைவாத வகுப்புகளில் கலந்துகொண்ட 14 பேர் இடைக்கிடையே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏனைய செய்திகள்