கிளிநொச்சியில் இளைஞர் கைது: கையடக்க தொலைபேசியில் LTTE புகைப்படங்களை வைத்திருந்ததாக குற்றச்சாட்டு

கிளிநொச்சியில் இளைஞர் கைது: கையடக்க தொலைபேசியில் LTTE புகைப்படங்களை வைத்திருந்ததாக குற்றச்சாட்டு

கிளிநொச்சியில் இளைஞர் கைது: கையடக்க தொலைபேசியில் LTTE புகைப்படங்களை வைத்திருந்ததாக குற்றச்சாட்டு

எழுத்தாளர் Staff Writer

08 Jul, 2021 | 5:32 pm

Colombo (News 1st) LTTE அமைப்பின் புகைப்படங்களை தனது கையடக்க தொலைபேசியில் வைத்திருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் கிளிநொச்சியில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் குற்றச்செயலுக்காக இரும்பு வாள் ஒன்றை மறைத்து வைத்திருந்ததாகவும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் புலனாய்வுப் பிரிவிற்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, உதயபுரம் பகுதியில் வைத்து சந்தேகநபரான 21 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரிடம் இருந்து வாள் ஒன்றும் இரண்டு கையடக்கத்தொலைபேசிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

LTTE அமைப்பு மற்றும் ஆவா குழுவின் புகைப்படங்கள் கையடக்கத்தொலைபேசியில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்