919 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகிய பிரதேசங்கள்

919 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகிய பிரதேசங்கள்

by Chandrasekaram Chandravadani 07-07-2021 | 11:10 AM
Colombo (News 1st) இன்று (07) காலை வரையான 24 மணி நேரத்தில் நாட்டில் புதிதாக 934 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்தது. இவர்களில் 15 பேர் வௌிநாடுகளில் வருகைதந்து தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்தப்பட்டிருந்தவர்கள் ஆவர். கொழும்பு மாவட்டத்தில் 201 பேரும் கம்பஹா மாவட்டத்தில் 160 பேரும் கண்டி மாவட்டத்தில் 32 நபர்களும் யாழ். மாவட்டத்தில் 15 பேரும் புத்தளம் மாவட்டத்தில் 15 பேரும் அம்பாறை மாவட்டத்தில் 12 பேரும் பதுளை மாவட்டத்தில் 19 நபர்களும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 27 பேரும் கிளிநொச்சி மாவட்டத்தில் ஐவரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 07 பேரும் திருகோணமலை மாவட்டத்தில் 11 பேரும் வவுனியா மாவட்டத்தில் 20 பேரும் மன்னார் மாவட்டத்தில் 07 பேரும் கடந்த 24 மணி நேரத்தில் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். நேற்றைய தினம் (06) அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களுடன், நாட்டில் இதுவரை தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 267,433 ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே, நேற்று முன்தினம் (05) 45 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நேற்று (06) தெரிவித்திருந்தார்.