Colombo (News 1st) ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராக சட்ட மா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இரண்டு வழக்குகளை விசாரணை செய்வதற்கு விசேட மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் நியமிக்கப்பட்டுள்ளது.
மேல் நீதிமன்ற நீதிபதி நாமல் பலல்லேவின் தலைமையில், பிரதம நீதியரசரால் மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் நியமிக்கப்பட்டுள்ளது.
மேல் நீதிமன்ற நீதிபதிகள் மூவரடங்கிய குழாமின் ஏனைய உறுப்பினர்களாக நீதிபதி ஆதித்ய படபெத்திகே மற்றும் மொஹமட் இஸர்தீன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
உரிய தகவல் கிடைத்திருந்த போதிலும், 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தடுப்பதற்கு முடியால் போனமை தொடர்பில் இரண்டு பிரதிவாதிகளுக்கும் எதிராக சட்ட மா அதிபரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.