மஹிந்த ஜயசிங்க உள்ளிட்ட இருவர் கைது

முன்னாள் மாகாண சபை உறுப்பினர் மஹிந்த ஜயசிங்க உள்ளிட்ட இருவர் கைது

by Staff Writer 07-07-2021 | 2:56 PM
Colombo (News 1st) முன்னாள் மாகாண சபை உறுப்பினர் மஹிந்த ஜயசிங்க உள்ளிட்ட இருவர் பமுனுகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நீதிமன்ற உத்தரவை மீறியமை மற்றும் தனிமைப்படுத்தல் விதிகளை மீறியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டார். ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகின்றமை தொடர்பில் வெலிசர நீதிமன்றத்தால் நேற்று (06) தடையுத்தரவு பெறப்பட்டிருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார். எனினும், தடையுத்தரவை மீறி சந்தேகநபர்கள் செயற்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, நேற்றைய ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மேலும் சிலரை கைது செய்வதற்காக விசேட பொலிஸ் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.