நாமல் கருணாரத்ன, சமந்த வித்யாரத்ன ஆகியோர் பொலிஸில் சரண்

by Staff Writer 07-07-2021 | 10:30 AM
Colombo (News 1st) அகில இலங்கை விவசாய சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் நாமல் கருணாரத்ன மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமந்த வித்யாரத்ன ஆகியோர் போகஹகும்புர பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர். தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி, பண்டாரவளை - பொரலந்தை பகுதியில் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இவர்கள் இருவரையும் கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. இந்நிலையில், பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ள இவர்கள் இருவரையும் இன்று (07) வெலிமடை நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.