சிரச ஊடக வலையமைப்பு மீதான அச்சுறுத்தல் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் பாராளுமன்றில் விசேட உரை

by Staff Writer 07-07-2021 | 1:08 PM
Colombo (News 1st) சிரச ஊடக வலையமைப்பிற்கு விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தல் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (07) பாராளுமன்றத்தில் விசேட உரை ஆற்றினார். அரசாங்கத்தின் உயர்மட்டக் குழுவொன்று சட்டத்தரணிகளை அழைத்து சிரச ஊடக வலையமைப்பின் ஔிபரப்பு அனுமதிப்பத்திரத்தை ஏதேனும் ஒரு சட்ட நடவடிக்கை மூலம் பறிப்பதற்கு சதித்திட்டமொன்று தீட்டப்படுவதாக நம்பகமான வகையில் அறியக் கிடைத்ததாக அவர் இதன்போது கூறினார்.