by Chandrasekaram Chandravadani 06-07-2021 | 12:35 PM
Colombo (News 1st) இன்று (06) காலை வரையான 24 மணி நேரத்தில் நாட்டில் புதிதாக 869 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்தது.
கொழும்பு மாவட்டத்தில் 44 பேரும் கம்பஹா மாவட்டத்தில் 83 பேரும் கண்டி மாவட்டத்தில் 50 பேரும் யாழ். மாவட்டத்தில் 10 பேரும் புத்தளம் மாவட்டத்தில் 07 பேரும் அம்பாறை மாவட்டத்தில் நால்வரும் நுவரெலியா மாவட்டத்தில் 97 பேரும் பதுளை மாவட்டத்தில் 80 பேரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 48 பேரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒருவரும் திருகோணமலை மாவட்டத்தில் நால்வரும் வவுனியா மாவட்டத்தில் 21 நபர்களும் மன்னார் மாவட்டத்தில் 07 பேரும் தொற்றாளர்களாக பதிவாகியுள்ளனர்.
இந்தநிலையில், நேற்று முன்தினம் (04) 32 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நேற்று (05) தெரிவித்திருந்தார்.